Saturday, February 28, 2009

வேண்டும்


பாதைகள்
முட்களாகும் போது
பாதங்களுக்கு
உறுதி வேண்டும்

தோல்விக‌ள்
தொட‌ரும் போது
துவ‌ண்டு விடாத‌
நெஞ்ச‌ம் வேண்டும்;

ப‌ய‌ண‌ங்க‌ள்
மாறும் போது
ம‌ன‌திற்குள்
தெளிவு வேண்டும்;

எதிர்ப்புக‌ள்
அதிக‌ரிக்கும் போது
ப‌ணிந்து விடாத‌
எண்ண‌ம் வேண்டும்.

Thursday, February 26, 2009

தேர்தல் திருவிழா

தேர்தல் திருவிழா
ஆரம்பமாகி விட்டது;

கிராமத்துச் சாலைகள் கூட‌
இளம் பெண்ணின் கன்னமாய்
பள்பளக்கும்
தெருவெங்கும் விளக்குகள்
ப‌ட்ட‌ப் ப‌க‌லில் கூட‌,
த‌க‌த‌க‌க்கும்;

ரேஷ‌ன் க‌டைக‌ளில்,
அரிசி ம‌ண்ணெண்ணெய்
குறையாம‌ல் கிடைக்கும்;
அம்மாவுக்கும் அய்யாவுக்கும்
வேட்டிசேலைக‌ள்
இல‌வ‌ச‌மாய் கிடைக்கும்;

பெரிய‌ த‌லைவ‌ர்க‌ள் எல்லாம்
சின்ன‌ குடிசைக‌ளைத்
தேடி வ‌ருவார்க‌ள்;
கும்பிட்ட‌ கைக‌ளுட‌ன்
குனிந்த‌ த‌லையுட‌ன்
ப‌ல் தெரிய‌ சிரிப்பார்க‌ள்;

கால்ச‌ட்டை போட்ட‌
சிறுவ‌ர் காலில் கூட‌,
த‌ய‌க்க‌மின்றி விழுவார்க‌ள்;
த‌ள்ளாடும் பாட்டிக‌ளை
க‌ட்டித்த‌ழுவி
சொந்த‌ம் கொண்டாடுவார்க‌ள்;

சொகுசு கார் ப‌வ‌னி போய்
சுளீர் வெயிலில்
வெறும் காலில் ந‌ட‌ப்பார்கள்;
அண்ணே சௌக்கிய‌மா..
அம்மா சௌக்கிய‌மா..
அன்பு ம‌ழை பொழிவார்க‌ள்;

த‌டுக்கி விழுந்தாலும்
ஐயோ..அடிப‌ட்டு விட்ட‌தா..
இந்தா ஆயிர‌ம் என்ப‌ர்க‌ள்;
க‌றி விருந்து பாயாசத்துடன்
சாப்பாடு போட்டு
ஆயிர‌மாய் அள்ளித் த‌ருவார்க‌ள்;

குடிசைக‌ளை மாற்றி,
எரியாத‌ ம‌ச்சு வீடு
க‌ட்டித் த்ருவோமென்பார்க‌ள்;
குழ‌ந்தைக‌ளின் க‌ல்விக்கு,
தெருவெங்கும் ப‌ள்ளிக்கூட‌ம்
வ‌ருமென்பார்க‌ள்;

ஒருவேளை சோற்றுக்கு
த‌வித்த‌ கால‌ம் போய்
நான்கு வேளை சாப்பிட‌லாம்;
வ‌ருவாய்க்கு வ‌ழி செய்வோம்;
திட்ட‌ங்க‌ள் த‌ருவோம்;
போடுங்க‌ள் வாக்குக‌ளென்பார்க‌ள்;

எல்லாம் ஒரிரு மாத‌ம்தான்;
தேர்த‌ல் நாள் வ‌ரைதான்;
முடிந்த‌தும் காதில் பூ தான்;
தேர்த‌ல் திருவிழாவும் முடியும்;
காணாம‌ல் போன‌ குழ‌ந்தையாய்
நாம் ம‌க்க‌ள்
.

Sunday, February 22, 2009

போராட்டம்

போராடு,
ஏழைகள்
ஆதரவற்றோர்க்கு
துணையாக‌;
அநியாய‌ம்
அராஜ‌க‌ங்க‌ளுக்கு
எதிராக‌;

போராடு,
உல‌க‌மே
எதிர்த்தாலும்
உண்மைக்காக‌;
த‌னியாளாய்
ஆனாலும்
ச‌ளைக்காம‌ல்;

போராடு,
நாண்லாய்
வ‌ளைவ‌தை
விட்டு விட்டு
ம‌லையாய்
புய‌லோடு
எதிர்த்திருந்து;

போராடு,
ஒவ்வொருவ‌ர்
வாழ்க்கையும்
போராட்ட‌மே..
தீமைக‌ளோடு
ச‌ம‌ர‌ச‌மே
கூடாது;

போராடு,
ம‌ர‌ண‌த்தின்
நிழ‌லிலும்
ம‌ய‌ங்காதே..
வீழ்வ‌த‌ற்காக‌
அல்ல‌
போராட்ட‌ங்க‌ள்;

போராடு,
ந‌ம்முடைய‌
போராட்ட‌ங்க‌ள்
ம‌க்க‌ளுக்காக‌
துளி இர‌த்த‌ம்
உள்ள‌வ‌ரை
துவ‌ளாது போராடு.

Friday, February 20, 2009

வெற்றி

ம‌க‌த்தான‌வைக‌ள்
என்றும்
வ‌லி நிறைந்த‌வை;
பாதையில் த‌டைக‌ள்
அதிக‌ம் என்றால்,
இல‌க்கு உய‌ர்ந்த‌தாயிருக்கும்;
காய்க்காத‌ ம‌ர‌த்தின் மேல்
யாரும் க‌ல்லெறிந்து
கொண்டிருக்க‌ மாட்டார்க‌ள்;
வைர‌ம்தான்
ப‌ட்டை தீட்ட‌ப்ப‌டும்;
மௌன‌ம்தான் விசாரிக்க‌ப்ப‌டும்;
அழுகை புல‌ம்ப‌ல்
சாதிக்க‌ப் பிற‌ந்த‌வ‌ர்க‌ளின்
த‌டைக் க‌ற்க‌ள்;
எதிலும் வெற்றி;
இல‌க்கு ம‌ட்டும‌ல்ல‌,
வாழ்க்கையே அதுதான்.

தாயும் மகளும்

பத்து மாதங்கள் சுமந்திருந்து,

உயிரைக் கொடுத்து பெற்றெடுத்து,

பகலிரவாய் கண்விழித்துக் காத்து,

தன்னுதிரத்தை பாலாக்கி கொடுத்து,

வித‌வித‌மாய் உண‌வு செய்து ஊட்டி,

எட்டி உதைத்தாலும் க‌ட்டி அணைத்து,

அழ‌கிய‌ துணிம‌‌ணிக‌ள் வாங்கித் த‌ந்து,

உய‌ரிய‌ ந‌கைக‌ள் பூட்டி அழ‌கு பார்த்து,

ப‌ள்ளிக்கு அனுப்பி ப‌டிக்க‌ வைத்து,

துன்ப‌ம் என்ப‌தே அறியாம‌ல்,

வ‌ள‌ர்த்து பெரிய‌வ‌ளாக்கினாள் தாய்.

யாரோ ஒருவ‌னை எங்கோ பார்த்து,

க‌ண்ணால் பேசி ம‌ன‌தை ப‌றிகொடுத்து,

தாயென்ன..அவ‌ன்தான் த‌ன்னுயிரென‌,

த‌ய‌ங்காம‌ல் ஓடிப்போனாள் ம‌க‌ள்.

Wednesday, February 18, 2009

பேசு பெண்ணே...

மௌன‌ம் சிற‌ந்த‌து;
என்றாலும், மௌன‌ம்
ம‌ட்டும்தான் சிற‌ந்த‌த‌ல்ல..

பேசித்தான் பாரேன்;
வார்த்தைக‌ளுக்கும்
ம‌திப்பிருக்க‌வே செய்கிற‌து.

காத‌ல் மொழிகள்
வேண்டாம்; அட‌..
காக்கை குருவி ப‌ற்றிப் பேசேன்.

எது உன்னைத் த‌டுக்கிற‌து..?
வெட்க‌மா..த‌ய‌க்க‌மா..?
அல்ல‌து க‌ர்வ‌மா..?

அ,ஆ,இ,ஈ யாவ‌து சொல்லு;
நீ ஊமை இல்லை
என்ப‌த‌யாவ‌து அறிந்து கொள்கிறேன்.

சுடாத‌ வெயில்

க‌டுமையான‌ வெயில்
நிற்க‌ நிழ‌ல் கிடைக்குமா
ஏங்கித் த‌வித்த‌ன‌
க‌ண்க‌ளும் ம‌ன‌தும்;

ச‌ற்றுத் தொலைவில் ஒரு மூதாட்டி,
காலில் செருப்பு கூட‌ இன்றி,
கொதிக்கும் தாரில் ஜ‌ல்லி க‌லந்து
சாலைப்ப‌ணி செய்து கொண்டிருந்தாள்;

இப்போது வெயில்
என்னைச் சுட‌வில்லை.