Friday, October 16, 2009

தீபாவளி வாழ்த்துக்கள்



.
தீபங்களின் ஒளியில்

இருள் ஒழியும்;

தீபாவளித் திருநாள்

தீமை வெல்லப்பட்டதின்

ஒரு அடையாளம்;

ஒருவருக்கு ஒருவர்

வாழ்த்துக்க‌ள் சொல்லி,

இன்ப‌ங்க‌ளை ப‌கிர்ந்து,

ந‌ன்மையின் வெற்றியை

கொண்டாடி ம‌கிழ்வோம்;

ப‌ட்டாடை உடுத்தி,

ப‌ட்டாசுக‌ள் கொளுத்தி,

ப‌ல‌கார‌ங்க‌ள் உண்டு,

எங்கும் ம‌கிழ்ச்சியாய்

ந‌ன்மையை வ‌ர‌வேற்போம்.

எல்லோரும் எல்லா

வளமும் பெற்று

ஏழைக‌ளின் இல்ல‌ங்க‌ளில்

ஏற்ற‌ம் மிகுந்து,

என்றும் இனிமை மிகுந்து

எங்கும் ஒளிம‌ய‌மாய் வாழ‌,

தீபாவளி நன்னாள் வ‌ழி காண‌ட்டும்;

க‌திர‌வ‌ன் உத‌ய‌த்தில்

வெளிச்ச‌ம் பெருகுவது போல்

தீபாவ‌ளித் திருநாளில்

ந‌ன்மைக‌ளும் ச‌ந்தோச‌ங்க‌ளும்

வெள்ள‌மென‌ பெருகி

எங்கும் ப‌ர‌வ‌ட்டும்.

No comments:

Post a Comment