Wednesday, February 18, 2009

சுடாத‌ வெயில்

க‌டுமையான‌ வெயில்
நிற்க‌ நிழ‌ல் கிடைக்குமா
ஏங்கித் த‌வித்த‌ன‌
க‌ண்க‌ளும் ம‌ன‌தும்;

ச‌ற்றுத் தொலைவில் ஒரு மூதாட்டி,
காலில் செருப்பு கூட‌ இன்றி,
கொதிக்கும் தாரில் ஜ‌ல்லி க‌லந்து
சாலைப்ப‌ணி செய்து கொண்டிருந்தாள்;

இப்போது வெயில்
என்னைச் சுட‌வில்லை.

No comments:

Post a Comment