Saturday, February 28, 2009

வேண்டும்


பாதைகள்
முட்களாகும் போது
பாதங்களுக்கு
உறுதி வேண்டும்

தோல்விக‌ள்
தொட‌ரும் போது
துவ‌ண்டு விடாத‌
நெஞ்ச‌ம் வேண்டும்;

ப‌ய‌ண‌ங்க‌ள்
மாறும் போது
ம‌ன‌திற்குள்
தெளிவு வேண்டும்;

எதிர்ப்புக‌ள்
அதிக‌ரிக்கும் போது
ப‌ணிந்து விடாத‌
எண்ண‌ம் வேண்டும்.

No comments:

Post a Comment