Friday, October 16, 2009

தீபாவளி வாழ்த்துக்கள்



.
தீபங்களின் ஒளியில்

இருள் ஒழியும்;

தீபாவளித் திருநாள்

தீமை வெல்லப்பட்டதின்

ஒரு அடையாளம்;

ஒருவருக்கு ஒருவர்

வாழ்த்துக்க‌ள் சொல்லி,

இன்ப‌ங்க‌ளை ப‌கிர்ந்து,

ந‌ன்மையின் வெற்றியை

கொண்டாடி ம‌கிழ்வோம்;

ப‌ட்டாடை உடுத்தி,

ப‌ட்டாசுக‌ள் கொளுத்தி,

ப‌ல‌கார‌ங்க‌ள் உண்டு,

எங்கும் ம‌கிழ்ச்சியாய்

ந‌ன்மையை வ‌ர‌வேற்போம்.

எல்லோரும் எல்லா

வளமும் பெற்று

ஏழைக‌ளின் இல்ல‌ங்க‌ளில்

ஏற்ற‌ம் மிகுந்து,

என்றும் இனிமை மிகுந்து

எங்கும் ஒளிம‌ய‌மாய் வாழ‌,

தீபாவளி நன்னாள் வ‌ழி காண‌ட்டும்;

க‌திர‌வ‌ன் உத‌ய‌த்தில்

வெளிச்ச‌ம் பெருகுவது போல்

தீபாவ‌ளித் திருநாளில்

ந‌ன்மைக‌ளும் ச‌ந்தோச‌ங்க‌ளும்

வெள்ள‌மென‌ பெருகி

எங்கும் ப‌ர‌வ‌ட்டும்.

Tuesday, May 19, 2009

த‌மிழ‌ர் ச‌ரித்திர‌மே..

மாவீரனே,
உனக்கு மரணமில்லை;
உலகத் தமிழர்களின்
கோடானு கோடி உள்ளங்களில்
நீ என்றும் வாழ்கிறாய்.
நீ ஒரு ச‌ரித்திர‌ம்;
நீ இல்லாம‌ல்
த‌மிழ‌ர் ச‌ரித்திர‌மில்லை.
த‌மிழ‌ர் இன‌த்தை
உல‌க‌றிய‌ச் செய்த‌
உன்ன‌த‌ சாத‌னையாள‌ன்.
க‌ருணாக்க‌ளால்
நீ காட்டிக் கொடுக்க‌ப்ப‌ட்டாலும்
க‌ள‌ங்காம‌ல் க‌ள‌ம் க‌ண்டாய்.
ஒரு த‌மிழ்க் குழ‌ந்தை
இருக்கும் வ‌ரை
உன் பெய‌ர் இருக்கும்.
நீ ஓய்வு காணா போராளி;
அடிமைத்த‌ன‌த்திற்கெதிராக‌
ச‌ம‌ர‌ச‌ம் காணாத‌ வீர‌ன்.
நீ த‌மிழ‌ன் என்ப‌தால்
எங்க‌ளுக்கெல்லாம் பெருமை.
மாவீர‌ன் பிர‌பாக‌ர‌னே..
ம‌ண்ணில் பிற்ந்தோர்க்கெல்லாம்
உன் போராட்டம் ஒரு வழிகாட்டி;
நீ ஏற்றி வைத்த‌ தீப்பிழ‌ம்பு
த‌மிழ‌ர்க்கென்றும் க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌ம்.
த‌மிழ் போல‌ என்றும் நீ
உல‌கில் நிலைத்து நிற்பாய்.

Friday, March 13, 2009

நினைவு

என்னை மறந்து விட‌
உங்களால் இயலாது;
நான் உங்கள் நினைவுகளில்
குடியிருந்தவனல்ல;
உங்கள் நினைவுகளே நான்தான்.

Sunday, March 8, 2009

இணை

நிழலும் உடலும் இணைபிரியாதவை;

இணையவும் முடியாதவை.

தழுவல்

மேகங்கள் அன்போடு
நிலவைத் தழுவின;
நிலவு ஒளியிழந்து போனது.

Wednesday, March 4, 2009

பாரதி

பாரதம் செய்த தவம்
பாரதி இங்கே பிறந்தது;

எட்டையபுரத்தில்
தோன்றிய அந்த பார'தீ'
எட்டு திசைக‌ளிலும்
சுட‌ரென‌ பிர‌காசித்த‌து;

பாட்டுத் த‌லைவ‌ன்
ஒரு தேச‌த் த‌லைவ‌னாய்
அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து
பாரதி வ‌ரையில்தான்;

அடிமைத் த‌ன‌த்திற்கு
எதிராக‌ உதித்து வ‌ந்த‌
அவ‌ன் பாட‌ல்க‌ளுக்கு
நாட்டு ம‌க்க‌ளே
அடிமையான‌ அதிச‌ய‌ம்
இங்கே நிக‌ழ்ந்த‌து;

பார‌தியின் பார்வையில்
வீர‌ம் விளையாடும்;
அவ‌ன் பாட‌ல்க‌ளில்
கோப‌ம் அலைமோதும்;

கொடுமைக‌ளுக்கு எதிராக‌
தீயாய் கொதித்த‌வ‌ன்
காத‌லின் முன்பு
ம‌ழையாய் பொழிந்தான்;

த‌மிழுக்கு வ‌ள‌ம் சேர்த்த‌
க‌விஞ‌ன்; அவ‌ன்
த‌மிழ‌ர் வாழ்வுக்கு
மெருகேற்றிய‌ க‌லைஞ‌ன்;

ஐந்தில் வ‌ளையாத‌து
ஐம்ப‌தில் வ‌ளையாது;
அத‌னால்தான் பார‌தி,
ஜாதிக‌ள் இல்லைய‌டி
என்றுபாப்பாவுக்கு உரைத்தான்;

வெள்ளைய‌ர்
சாதிக்கு ம‌ட்டும்
அவ‌ன் பாட‌ல்க‌ள்
தீ மூட்ட‌வில்லை;
சில‌ மூட‌ர்க‌ள் பேசிய‌
சாதி பேத‌த்திற்கும்
அது தீ மூட்டிய‌து;

அவ‌ன் எழுதுகோலிலிருந்து
பிர‌ச‌வித்த‌
ஒவ்வொரு எழுத்தும்
புதுமை புதுமை
என்றே முழ‌க்க‌மிட்ட‌ன‌;

'காக்கை குருவி எங்க‌ள் சாதி'
ம‌னிதாபிமான‌த்தின்
பொருள் இங்கே
புதிய‌ பொலிவோடு
விள‌ங்குகிற‌து;

மேக‌ங்க‌ள் மழை பொழிய‌
பேத‌ம் பார்ப்ப‌தில்லை;
பாரதியின் க‌விதைக‌ளும்
ஏழை ப‌ண‌க்கார‌ன்
பேத‌ம் காண‌வில்லை;

'எல்லோரும் ஒர் குல‌ம்
எல்லோரும் ஒர் நிறை'
ஆஹா.. பாரதி,
நீதான் இந்நாட்டு ம‌ன்ன‌ன்;

புக‌ழுக்காக‌ பாரதி
க‌விதை எழுத‌வில்லை;
அவ‌ன் க‌விதையிட‌ம்தான்
புக‌ழ் ச‌ர‌ண‌டைந்த‌து;

நாட்டு விடுத‌லைக்காகப்
பாடிய‌வ‌ன்
ந‌ம‌து வீட்டுப் பெண்
விடுத‌லைக்கும்
போராடினான்;

ச‌க்திதாச‌ன் அவ‌ன்;
அவ‌ன‌து
ச‌க்தி வ‌ழிபாட்டில் கூட‌,
பொங்கியெழுந்த‌து
தேச‌ப‌க்தி;

பார‌த‌ நாடு
பார்க்கெலாம் தில‌க‌ம்;
பாரதி
பார‌த‌ நாட்டின் தில‌க‌ம்.

Saturday, February 28, 2009

வேண்டும்


பாதைகள்
முட்களாகும் போது
பாதங்களுக்கு
உறுதி வேண்டும்

தோல்விக‌ள்
தொட‌ரும் போது
துவ‌ண்டு விடாத‌
நெஞ்ச‌ம் வேண்டும்;

ப‌ய‌ண‌ங்க‌ள்
மாறும் போது
ம‌ன‌திற்குள்
தெளிவு வேண்டும்;

எதிர்ப்புக‌ள்
அதிக‌ரிக்கும் போது
ப‌ணிந்து விடாத‌
எண்ண‌ம் வேண்டும்.

Thursday, February 26, 2009

தேர்தல் திருவிழா

தேர்தல் திருவிழா
ஆரம்பமாகி விட்டது;

கிராமத்துச் சாலைகள் கூட‌
இளம் பெண்ணின் கன்னமாய்
பள்பளக்கும்
தெருவெங்கும் விளக்குகள்
ப‌ட்ட‌ப் ப‌க‌லில் கூட‌,
த‌க‌த‌க‌க்கும்;

ரேஷ‌ன் க‌டைக‌ளில்,
அரிசி ம‌ண்ணெண்ணெய்
குறையாம‌ல் கிடைக்கும்;
அம்மாவுக்கும் அய்யாவுக்கும்
வேட்டிசேலைக‌ள்
இல‌வ‌ச‌மாய் கிடைக்கும்;

பெரிய‌ த‌லைவ‌ர்க‌ள் எல்லாம்
சின்ன‌ குடிசைக‌ளைத்
தேடி வ‌ருவார்க‌ள்;
கும்பிட்ட‌ கைக‌ளுட‌ன்
குனிந்த‌ த‌லையுட‌ன்
ப‌ல் தெரிய‌ சிரிப்பார்க‌ள்;

கால்ச‌ட்டை போட்ட‌
சிறுவ‌ர் காலில் கூட‌,
த‌ய‌க்க‌மின்றி விழுவார்க‌ள்;
த‌ள்ளாடும் பாட்டிக‌ளை
க‌ட்டித்த‌ழுவி
சொந்த‌ம் கொண்டாடுவார்க‌ள்;

சொகுசு கார் ப‌வ‌னி போய்
சுளீர் வெயிலில்
வெறும் காலில் ந‌ட‌ப்பார்கள்;
அண்ணே சௌக்கிய‌மா..
அம்மா சௌக்கிய‌மா..
அன்பு ம‌ழை பொழிவார்க‌ள்;

த‌டுக்கி விழுந்தாலும்
ஐயோ..அடிப‌ட்டு விட்ட‌தா..
இந்தா ஆயிர‌ம் என்ப‌ர்க‌ள்;
க‌றி விருந்து பாயாசத்துடன்
சாப்பாடு போட்டு
ஆயிர‌மாய் அள்ளித் த‌ருவார்க‌ள்;

குடிசைக‌ளை மாற்றி,
எரியாத‌ ம‌ச்சு வீடு
க‌ட்டித் த்ருவோமென்பார்க‌ள்;
குழ‌ந்தைக‌ளின் க‌ல்விக்கு,
தெருவெங்கும் ப‌ள்ளிக்கூட‌ம்
வ‌ருமென்பார்க‌ள்;

ஒருவேளை சோற்றுக்கு
த‌வித்த‌ கால‌ம் போய்
நான்கு வேளை சாப்பிட‌லாம்;
வ‌ருவாய்க்கு வ‌ழி செய்வோம்;
திட்ட‌ங்க‌ள் த‌ருவோம்;
போடுங்க‌ள் வாக்குக‌ளென்பார்க‌ள்;

எல்லாம் ஒரிரு மாத‌ம்தான்;
தேர்த‌ல் நாள் வ‌ரைதான்;
முடிந்த‌தும் காதில் பூ தான்;
தேர்த‌ல் திருவிழாவும் முடியும்;
காணாம‌ல் போன‌ குழ‌ந்தையாய்
நாம் ம‌க்க‌ள்
.

Sunday, February 22, 2009

போராட்டம்

போராடு,
ஏழைகள்
ஆதரவற்றோர்க்கு
துணையாக‌;
அநியாய‌ம்
அராஜ‌க‌ங்க‌ளுக்கு
எதிராக‌;

போராடு,
உல‌க‌மே
எதிர்த்தாலும்
உண்மைக்காக‌;
த‌னியாளாய்
ஆனாலும்
ச‌ளைக்காம‌ல்;

போராடு,
நாண்லாய்
வ‌ளைவ‌தை
விட்டு விட்டு
ம‌லையாய்
புய‌லோடு
எதிர்த்திருந்து;

போராடு,
ஒவ்வொருவ‌ர்
வாழ்க்கையும்
போராட்ட‌மே..
தீமைக‌ளோடு
ச‌ம‌ர‌ச‌மே
கூடாது;

போராடு,
ம‌ர‌ண‌த்தின்
நிழ‌லிலும்
ம‌ய‌ங்காதே..
வீழ்வ‌த‌ற்காக‌
அல்ல‌
போராட்ட‌ங்க‌ள்;

போராடு,
ந‌ம்முடைய‌
போராட்ட‌ங்க‌ள்
ம‌க்க‌ளுக்காக‌
துளி இர‌த்த‌ம்
உள்ள‌வ‌ரை
துவ‌ளாது போராடு.

Friday, February 20, 2009

வெற்றி

ம‌க‌த்தான‌வைக‌ள்
என்றும்
வ‌லி நிறைந்த‌வை;
பாதையில் த‌டைக‌ள்
அதிக‌ம் என்றால்,
இல‌க்கு உய‌ர்ந்த‌தாயிருக்கும்;
காய்க்காத‌ ம‌ர‌த்தின் மேல்
யாரும் க‌ல்லெறிந்து
கொண்டிருக்க‌ மாட்டார்க‌ள்;
வைர‌ம்தான்
ப‌ட்டை தீட்ட‌ப்ப‌டும்;
மௌன‌ம்தான் விசாரிக்க‌ப்ப‌டும்;
அழுகை புல‌ம்ப‌ல்
சாதிக்க‌ப் பிற‌ந்த‌வ‌ர்க‌ளின்
த‌டைக் க‌ற்க‌ள்;
எதிலும் வெற்றி;
இல‌க்கு ம‌ட்டும‌ல்ல‌,
வாழ்க்கையே அதுதான்.

தாயும் மகளும்

பத்து மாதங்கள் சுமந்திருந்து,

உயிரைக் கொடுத்து பெற்றெடுத்து,

பகலிரவாய் கண்விழித்துக் காத்து,

தன்னுதிரத்தை பாலாக்கி கொடுத்து,

வித‌வித‌மாய் உண‌வு செய்து ஊட்டி,

எட்டி உதைத்தாலும் க‌ட்டி அணைத்து,

அழ‌கிய‌ துணிம‌‌ணிக‌ள் வாங்கித் த‌ந்து,

உய‌ரிய‌ ந‌கைக‌ள் பூட்டி அழ‌கு பார்த்து,

ப‌ள்ளிக்கு அனுப்பி ப‌டிக்க‌ வைத்து,

துன்ப‌ம் என்ப‌தே அறியாம‌ல்,

வ‌ள‌ர்த்து பெரிய‌வ‌ளாக்கினாள் தாய்.

யாரோ ஒருவ‌னை எங்கோ பார்த்து,

க‌ண்ணால் பேசி ம‌ன‌தை ப‌றிகொடுத்து,

தாயென்ன..அவ‌ன்தான் த‌ன்னுயிரென‌,

த‌ய‌ங்காம‌ல் ஓடிப்போனாள் ம‌க‌ள்.

Wednesday, February 18, 2009

பேசு பெண்ணே...

மௌன‌ம் சிற‌ந்த‌து;
என்றாலும், மௌன‌ம்
ம‌ட்டும்தான் சிற‌ந்த‌த‌ல்ல..

பேசித்தான் பாரேன்;
வார்த்தைக‌ளுக்கும்
ம‌திப்பிருக்க‌வே செய்கிற‌து.

காத‌ல் மொழிகள்
வேண்டாம்; அட‌..
காக்கை குருவி ப‌ற்றிப் பேசேன்.

எது உன்னைத் த‌டுக்கிற‌து..?
வெட்க‌மா..த‌ய‌க்க‌மா..?
அல்ல‌து க‌ர்வ‌மா..?

அ,ஆ,இ,ஈ யாவ‌து சொல்லு;
நீ ஊமை இல்லை
என்ப‌த‌யாவ‌து அறிந்து கொள்கிறேன்.

சுடாத‌ வெயில்

க‌டுமையான‌ வெயில்
நிற்க‌ நிழ‌ல் கிடைக்குமா
ஏங்கித் த‌வித்த‌ன‌
க‌ண்க‌ளும் ம‌ன‌தும்;

ச‌ற்றுத் தொலைவில் ஒரு மூதாட்டி,
காலில் செருப்பு கூட‌ இன்றி,
கொதிக்கும் தாரில் ஜ‌ல்லி க‌லந்து
சாலைப்ப‌ணி செய்து கொண்டிருந்தாள்;

இப்போது வெயில்
என்னைச் சுட‌வில்லை.

இளைஞ‌னே...

விதியில் ந‌ம்பிக்கை
கொள்வ‌த‌ற்கு ப‌தில்,
ம‌ன‌தில் ந‌ம்பிக்கை
வ‌ள‌ர்த்துக் கொள்;
விடியும்பொழுது
ந‌ம் உரிமையென்று.

நினைவுக‌ள்

நான் என் நினைவுக‌ளை
உன் இத‌ய‌த்தில்தான்
ப‌த்திர‌ப்ப‌டுத்தி
வைத்துள்ளேன்;
உன் இத‌ய‌ம்
துடிக்கும் போதெல்லாம்
என் நினைவுக‌ளை
அது எதிரொலிக்கும்
ம‌ற‌ந்துவிடாதே.

உற‌வு

தென்ற‌லுக்கும்
ம‌ல‌ருக்கும் ஊட‌ல்;
ம‌ல‌ர் கோப‌த்தோடு போய்,
புய‌லோடு
சேர்ந்து கொண்ட‌து.

தேட‌ல்

தேவைதைக‌ள் பூ தொடுத்து
வாச‌லில் த‌வ‌மிருந்த‌ன‌ர்;
நான் தேவ‌தையை
தேடித் தேடி, ஊரெங்கும்
அலைந்து கொண்டிருந்தேன்.

தாய்.

அன்பென்ற வார்த்தை
பிறந்த போது,
அதற்கு,சூட்டப்பட்ட பெயர்